2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘ஒரு துளி இரத்தம் ஓர் உயிரைக் காக்கும்’

பைஷல் இஸ்மாயில்   / 2018 மார்ச் 07 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை துளிர் விளையாட்டுக் கழகத்தால் “உயிர்காக்கும் யாவரும் கடவுளே” எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் சனிக்கிழமை (10) மாபெரும் இரத்ததான முகாமொன்றை நடத்த சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, அதன் செயலாளார் தெரிவித்தார்.

இந்த இரத்ததான நிகழ்வு, கல்முனை ஆர்.கே.எம். பாடசாலை மண்டபத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“எம் ஒரு துளி இரத்தம், நாளை ஓர் உயிரையே காக்க உதவும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதற்காக நாம் அனைவரும் எமது உடலிலுள்ள ஒரு துளி இரத்தமெனும் வழங்க முன்வருவோம்” என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .