2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கடலோர உயிர்காப்பு நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 ஜனவரி 09 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை மாவட்டத்தின் பாணம மற்றும் பொத்துவில் ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு பிரதேசங்களில், கடலோர உயிர்காப்பு நிலையங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா, இன்று (09) நடைபெற்றது.

பொத்துவில் மற்றும் பாணம கடலோர கரையோரப் பிரதேசங்களை நோக்கி அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அவர்களின் நலன் கருதியே, கடலோர பிரதேசங்களில் பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்தும்முகமாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, பாணம, ராகம்வெளி, பீனட் பாமிலும் பொத்துவில், ஊரணி பிரதேசத்தைச் சோ்ந்த கொட்டுக்கல் பிரதேசத்திலும் உயிர் காப்பு பிரிவின் செயற்பாட்டாளா்களுக்கான கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கபில ஜெயசேகர, பிரதி பொலிஸ் மா அதிபர் நுவான் வெதசிங்க, மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி சமந்த விஜேசேகர லகுகல, பிரதேச செயலாளர் எஸ்.எஸ்.அனுரத்த, பாணம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ஜயசிங்க உட்பட கடலோர உயிர் பாதுகாப்புக் குழுவினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X