2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கனகர் கிராம மக்களின் போராட்டம் தொடர்கிறது

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஊறணி கனகர் கிராமத்து மக்கள், தமது சொந்த இடங்களில் தம்மை மீளக் குடியமர்த்துமாறு, இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டம், 36ஆவது நாளாகவும் இன்றும் (18) தொடர்ந்தது.

சாதகமான தீர்வு கிடைக்கும் வரை, வனவள திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத்துக்கு முன்னால் தொடர்ச்சியான உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, கனகர் கிராம மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் செயலாளர் வேலுப்பிள்ளை அருணாச்சலம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .