2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கனடா பாடுமீன் அமைப்பால் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்  மேற்கொண்ட முயற்சியின் பலனாக, கனடா பாடுமீன் அமைப்பால், 1,000 குடும்பங்களுக்கான அரிசி பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் மட்டக்களப்பு மாநகர பிரதேசத்தில், 300 குடும்பங்களுக்கும் கரடியனாறு பிரதேசத்தில் 200 குடும்பங்களுக்கும், அம்பாறை மாவட்டத்தில் 521 குடும்பங்களுக்கும் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அம்பாறை மாவட்டத்தில், ஆலயடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலும் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ள 521 குடும்பங்களுக்கு, 900 ரூபாய் பெறுமதியான அரிசி பொதிகள், அதற்கான காசோலையை குறித்த பிரதேச செயலகங்களுக்கு, முதல்வர் தி.சரவணபவன் விஜயம் செய்து வழங்கிவைத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .