2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கல்முனையில் தைப்பொங்கல்

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் தைப்பொங்கல் திருவிழா, கல்முனை ஸ்ரீ சித்தி தரவைபிள்ளையார் ஆலய முன்றலில் நாளை மறுதினம் (17) நடைபெறவுள்ளதாக, பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ் தெரிவித்தார்.

தமிழர்களின் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளோடு, காலை 8 மணிக்கு இவ்விழா ஆரம்பமாகவுள்ளது.

பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில், அம்பாறை மாவட்ட செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

இத்தைப்பொங்கல் திருவிழாவைச் சிறப்பிக்கும் முகமாக உழவர்களால் ஏர் பூட்டப்பட்ட எருதுகளோடு, வீதி ஊர்வலமும் நடைபெறவுள்ளது.

வீதி ஊர்வலத்தைத் தொடர்ந்து, பிரதேச செயலகத்தில் மாதர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், சமூக அமைப்புகள், இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஏற்பாடு செய்துள்ள பொங்கல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .