2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காணிச் சட்டங்கள் குறித்து தெளிவூட்டல்

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேச உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கான காணி உரிமை சட்டங்கள் தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு, திருக்கோவில் பிரதேசத்தில், நேற்று நடைபெற்றன.

இவ் செயலமர்வானது பொருளாதார சமூக, கலாசார உரிமை நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக, சட்டம், சமூக நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில், வெஸ்லி மெதடிஸ்த மண்டபத்தில்  நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண காணி உதவி ஆணையாளர் க.ரவிராஜ் வளவாளராக கலந்துகொண்டு, உள்ளூராட்சி அதிகார சபைகளும் இலங்கையில் உள்ள காணிகள், காணி கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் காணிகளைக் கையகப்படுத்தல், அரச காணிகளும் சட்டங்களும் எனும் தலைப்புகளில் தெளிவூட்டல்களை வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .