2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காரைதீவில் யானைகள் அட்டகாசம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 மார்ச் 10 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, காரைதீவு கமநல கேந்திர மத்திய நிலையத்தின் சுற்றுமதில், நேற்று (09) நள்ளிரவு 01 மணியளவில், காட்டுயானைகளின் தாக்குதலினால் சேதமுற்றுள்ளதாக கமநல சேவை பொறுப்பதிகாரி எம்.சிதம்பரநாதன் தெரிவித்தார்.

குறித்த நிலையத்தின் வடபுற மதில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதோடு அங்கிருந்த பயிர்களும் யானையினால் நாசமாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

ஏற்கெனவே, பல தடவைகள், கமநல சேவை நிலையத்தின் சுற்று மதிலை, யானைகள் சேதப்படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக வின ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு பல தடவை அறிவித்தும், இது தொடர்பாக அவர்கள் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லையென்றும் இதன்போது அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .