2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கால எல்லை நீடிப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜூலை 15 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள வி​​சேட காணி மத்தியஸ்த சபைக்கு, தவிசாளர்களையும் மத்தியஸ்தர்களையும் இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதென, மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ராஜனி அத்தப்பத்து அறிவித்துள்ளார்.

குறித்த நியமனங்களைக் கோரும் அறிவித்தல், 2018.03.19ஆம் திகதிய 2063/15 ஆம் இலக்க வர்த்தமானியில் விடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர், செயலாளர், மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு, இல.80, நீதிமன்ற வீதி, கொழும்பு-12 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .