2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத காலவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களிலுள்ள சில்லறை விற்பனை நிலையங்களில், காலாவதியான குளிர்பானங்கள், பால்மா வகைகள், வாசனைத் திரவியங்கள் போன்றவை விற்பனை செய்யப்படுவதுடன், விலைப்பட்டியல் காட்சிப் படுத்தப்படாமல் உள்ளதாகவும் பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .