2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’குப்பை வீசினால் சட்ட நடவடிக்கை’

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை - பொத்துவில் பிரதேசத்திலுள்ள முக்கிய கேந்திர நிலையங்களில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசித், இன்று (13) தெரிவித்தார்.

பொத்துவில், கோமாரி, மணல்மலை, கொட்டுக்கல், குடாக்கல், நவலாறு, லகுகல பிரதான வீதி ஆகிய இடங்களில் “இவ்விடத்தில் குப்பை கொட்டுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது” என்ற வாசகம் அடங்கிய அறிவித்தல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இதை மீறுவோர் மீது, 2008ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க, தேசியப் பொது வழிகள் சட்டம் 73 (1)இன் பிரகாரம், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .