2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொரோனா பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 மார்ச் 30 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாக்க இரவு பகலாகப் பாடுபடும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் பொலிஸ் நிலையத்துக்கு  கொரோனா பாதுகாப்பு அங்கிகள்  இலவசமாக  வழங்கி வைக்கப்பட்டன.

இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பின் ஊடாக சம்மாந்துறையை சேர்ந்த எம்.எஸ். பசீலின்  ஏற்பாட்டில், அரச சட்டவாதி சட்ட முதுமாணி  எம்.ஏ.எம். லாபிரின்  தலைமையில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 50 கொரோனா பாதுகாப்பு அங்கிகள் இலவசமாக இன்று (30)   வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்,  எம் எஸ் பஸீல், இருட்டுவட்ட நண்பர்கள் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .