2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஐவர் கைது

Editorial   / 2019 மே 03 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பிரதேசத்தில், சந்தேகத்துக்கு இடமாக நடமாடியக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.றாபி வியாழக்கிழமை (02) உத்தரவிட்டுள்ளார்.

திருக்கோவில் பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலையடுத்து,  கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பிரதேசத்தில் சோதனை மேற்கொண்ட பொலிஸார், குறித்த ஐவரையும் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி ஐவரையும் பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.றாபி முன்னிலையில், வியாழக்கிழமை (2) ஆஜர்படுத்தியபோது, சந்தேக நபர்களை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .