2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சந்தைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பொதுச் சந்தைகள்,  மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்று, அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சக்கி, இன்று (05) தெரிவித்தார்.

நாளை திங்கட்கிழமை (06) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருள்களைக் கொள்வனவு செய்வதற்கு, அக்கரைப்பற்று சிறுவர் பூங்கா, அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பட்டியடிப்பிட்டி பொதுவிளையாட்டு மைதானம் என்பவற்றில்  தற்காலிக சந்தை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொதுமக்கள் கூடி நிற்காமல், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி.தங்களுக்குத் தேவையான பொருள்;களைக் கொள்வனவு செய்து, உடனடியாக வீடு திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

அமுலில் உள்ள ஊரடங்குச்சட்டம், தற்காலிகமாக தளர்த்தப்படுகின்ற வேளையில், பொதுச் சந்தைகள், வர்த்தக நிலையங்கள், கடைகள் ஏதும் திறக்கக் கூடாதெனவும், இக்காலப்பகுதியில் பொதுமக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்;களை தமது வீடுகளுக்கு முன்னால் வருகின்ற நடமாடும் விற்பனை வியாபாரிகளிடம் கொள்வனவு செய்தற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுகின்ற போது, அவசிய தேவையின்றி பொதுமக்கள் எவரும் வீட்டில் இருந்து வெளியேறி, வீதிகளில் நடமாட வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மேற்படி அறிவுறுத்தல்களை பொதுமக்கள் முழுமையாக பின்பற்றுவதன் மூலம் எமது பகுதியில் கொடிய ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் பரவலை முற்றாக தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்வதாக, மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் சக்கி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .