2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘சிறந்த வேட்பாளரை தெரிவு செய்வோம்’

வி.சுகிர்தகுமார்   / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறந்த ஜனாதிபதி வேட்பாளரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யுமெனத் தெரிவித்த கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், அவ்வாறு தெரிவு செய்யும் வேட்பாளருக்கு, தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

அம்பாறை, திருக்கோவில் பிரதேச கலாசார மண்டபத்தில், நேற்று (13) மாலை இடம்பெற்ற தற்கால அரசியல் தொடர்பான மக்கள் சந்திப்பின் போதே, மேற்படி கருத்தை அவர் தெரிவித்தார்.

அவர்  அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் நாட்டிலே ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்ததுடன் உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டு, வெள்ளை வான் கடத்தலும் தாராளமாக இடம்பெற்றதாகவும் அவ்வாறான நிலை எதிர்காலத்தில் உருவாகக்கூடாது என்பதில் தாம் கவனமாக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த அரசாங்கத்தின் சில செயற்பாடுகளோடு தாம் இணைந்து செயற்படும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் ஒரு புறம் அபிவிருத்தி எனும் பாதையிலும் மறுபுறம் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறும் முயற்சியிலும் கூட்டமைப்பு பயணிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X