2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழக சுதந்திர ஊழியர் சங்க பொதுக் கூட்டம்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 நவம்பர் 27 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்கிழக்குப் பல்கலைக்கழக சுதந்திர ஊழியர் சங்கத்தின் இரண்டாவது வருடாந்தப் பொதுக் கூட்டம், சங்கத்தின் தலைவர் ஏ.எம் அன்வர் தலைமையில், பல்கலைக்கழக ஊழியர் மேம்பாட்டு மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் நாளை (28) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இலிகிதர் சேவையும் அதனோடு இணைந்த சேவையாளர்களையும் கொண்ட இந்த ஊழியர் சங்கத்தின் உருவாக்கம், அதன் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்த விரிவான கொள்கை விளக்க உரையும் இதன்போது இடம்பெறவுள்ளதாக அதன் தலைவர் ஏ.எம்.அன்வர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாகவும் பல்கலைக்கழகப் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் கௌரவ அதிதியாகவும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X