2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நூல் வெளியீடு

வி.சுகிர்தகுமார்   / 2017 நவம்பர் 30 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.எல்.நௌபீர் எழுதிய 'இறக்காமம் கல்வியும் அரசியலும்' எனும் நூல் வெளியீடு, இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03) பிற்பகல் 4 மணியளவில் நடைபெறவுள்ளது.

இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில், கப்பற் பொறியியலாளரும் பிரதேச அபிவிருத்தி இணைத்தலைவருமான அல்ஹாஜ் எஸ்.ஐ.மன்சூர் கலந்துகொண்டு நூலை வெளியிடவுள்ளார்.

நூலின் ஆய்வுரையை, தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா வழங்கி வைக்க, விமர்சன உரையை, மீள்பார்வை பத்திரிகையின்  பிரதம ஆசிரியர் சிறாஜ் மஸ்ஹுரும், கருப்பொருள் உரையை அபிவிருத்தி கற்கைகள் மையத்தின் பணிப்பாளரும் சமூக ஆய்வாளருமான அஷ்ஷெய்க் றவூப் செய்னும் வழங்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .