2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நெனசலவின் 10ம் ஆண்டு நிறைவு விழா

Editorial   / 2019 ஜூலை 15 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பாறுக் ஷிஹான், பி.எம்.எம்.ஏ. காதர்

கல்முனை கே.டி.எம்.சி நெனசலவின் 10ம் ஆண்டு நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் விழாவும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (14) வரவேற்பு மண்டபத்தில்  நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.எம். ஹாஜாவின்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்திற்குமான சபையின்  தலைவர் வைத்திய கலாநிதி  ஏ.எல்.எம் நஸீர்  கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஒன்பது பாடநெறிகளை பூர்த்தி செய்த 220 மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கல்முனை பகுதியில் பிரசித்திபெற்ற பாடசாலைகளில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன்  வருடா வருடம் ஊடகவியளாளர்களை கௌரவிக்கும் நிகழ்வின் இவ்வருடம் சிரேஸ்ட ஊடகவியளாளர் யூ. முகம்மட் இஸ்ஹாக் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X