2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பட்டதாரிகளை பதிவு செய்தல்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜூன் 28 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் தெரிவித்தார்.

வேலையற்ற 15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தின் கீழ், தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய, 2018.06.30ஆம் திகதிக்கு முன் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பட்டத்தை பெற்றுள்ள 45 வயதுக்குட்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் பதிவு செய்யப்படுகின்றனர்.

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய கிராமங்களிலுள்ள தகைமையுடைய அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதிக்கு முன்னர் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .