2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாவனைக்குஉதவாக உணவு பண்டங்கள் விற்பனை :உரிமையாளர்களுக்கு வழக்கு

Editorial   / 2019 ஜூலை 23 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

 அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத உணவுப் பண்டங்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 02 உணவகங்களின் உரிமையாளர்களுக்கெதிராக பொத்துவில் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொத்துவில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.எம். அப்துல் மலீக்  நேற்று செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தார்.

 பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ.யூ. அப்துல் சமட் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினர்நேற்றுமுன்தினம்  திங்கட்கிழமை (22) திடீர் சுற்றி வளைப்பினை மேற்கொண்டனர்.

 இதன் போதே விற்பனைக்காக பாவனைக்குஉதவாக உணவுப் பண்டங்கள், சுகாதாரத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் உணவுப் பண்டங்களை வைத்திருந்தமை மற்றும் பாவித்த தேங்காய் எண்ணெயை மீண்டும் பாவனைக்கு பயன்படுத்தப்பட்டது தொடர்பாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

08 உணவகங்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், சில உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 02 உணவகங்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.எம். அப்துல் மலீக் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .