2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பின்லாடனின் விரிவுரைகளுடன் ஒருவர்​ கைது

Editorial   / 2019 மே 22 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அல்​-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடனின் உருவப்படும் பொறிக்கப்பட்ட, அவரது விரிவுரைகள் அடங்கிய புத்தகமொன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கல்முனை, மருதமுனை பிரதேசத்தில், சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (21) இரவு கைது செய்யப்பட்ட குறித்த நபர், பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே, கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை விசேட பொலிஸ் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து, இறுவட்டுகள் இரண்டையும் சிம் அட்டைகளையும், அலைபேசிகளையும் பொலிஸார் பரிமுதல் செய்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .