2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புதிய அமைப்பு அங்குரார்ப்பணம்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 ஜனவரி 08 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தை தளமாகக் கொண்டு, “சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம்” எனும் புதிய அமைப்பொன்று, நேற்று (07) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் தலைமையிலான முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில், அதன் ஆலோசகர் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில், விரிவுரையாளர் அஹமதுல் அன்சார் மௌலானாவின் நெறிப்படுத்தலில், கல்முனை கிறிஸ்ரா இல்லத்தில் இதன் அங்குரார்ப்பணம் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது புதிய அமைப்புக்கான வரைவு யாப்பு சமர்ப்பிக்கப்பட்டு, அங்கிகரிக்கப்பட்டதுடன், அதன் பிரகாரம் நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .