2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பொது நூலக நிர்மாணத்தை துரிதப்படுத்த நடவடிக்கை

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 மார்ச் 25 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் மற்றும் சமூக முன்னேற்ற, இந்து சமய விவாகர அமைச்சர் மனோ கணேசனின் 16 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் கல்முனை, பாண்டிருப்பு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் பொது நூலகத்தின் பணிகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மனோ கணேசனின் இணைப்புச் செயலாளர் வி.ஜனகன், அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் உள்ளிட்டோர் நேற்று (24) அங்கு நேரடியாக விஜயம் செய்து, இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களை சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு இணைப்புச் செயலாளர் வழங்கியதுடன், இதற்கு அமைச்சு மட்டத்தில் தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X