2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பொதுக்கூட்டம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 மார்ச் 08 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, காரைதீவு பிரதேச செயலகப் பிரிவின் அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்திச் சங்கத்தின் 17ஆவது  வருடாந்தப் பொதுக்கூட்டம், காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் பெண்கள் பாடசாலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக, அதன் செயலாளர்  ரி.செல்லத்துரை அறிவித்துள்ளார்.

சங்கத்தின் தலைவர் வெ. ஜெயநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், சங்க உறுப்பினர்களின் நலன்கருதி முக்கியமான தீர்மானங்களும் எதிர்காலச் செயற்பாடுகள் பற்றிய திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில், 2018ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெறவிருப்பதால் மாதாந்த சந்தாப்பணமாக 50 ரூபாய் செலுத்தும் அனைத்து சங்க உறுப்பினர்களும்  தவறாது கலந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X