2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மின் கட்டணம் செலுத்தாதோருக்கு சிவப்பு அறிவித்தல்

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

இலங்கை மின்சார சபையின் கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் மாதாந்த மின் கட்டணத்தை செலுத்தாத மின் பாவனையாளர்களின் மின் இணைப்பு துண்டித்தல் தொடர்பான சிவப்பு அறிவித்தல் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளரால் விடுக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் துண்டித்தல் தொடர்பான சிவப்பு அறிவித்தல் மின்சாரக் கட்டணம் நிலுவையிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு மின் மானிப்பு வாசிப்பவர்களுடாக விநியோகிக்கப்படுகின்றது. கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், மாளிகைக்காடு, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச மின் பாவனையாளருக்கே இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்கும் மேலான கட்டணத்தை கொண்டிருப் பவர்களின் மின் துண்டிப்பு செய்யப்படவுள்ளதோடு அவ்வாறு இணைப்பு துண்டிக்கப்படுமிடத்தில் மீள் இணைப்பை ஏற்படுத்துவதற்காக முற்று முழுதான மின் நிலுவைக் கட்டணம், தண்டப்பணம் மற்றும் மீள் இணைப்புக் கட்டணம் என்பன செலுத்த வேண்டுமென சிவப்பு அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X