2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மாநாடும் பொதுக் கூட்டமும்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 10ஆவது வருடாந்த மாநாடும் பொதுக் கூட்டமும், சாய்ந்தமருது லீ மெடிலியன் வரவேற்பு மண்டபத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளதாக, அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் யூ.எல்.எம். பைஸர் தெரிவித்தார்.

2017/2018ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு டம்பெறவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி திருமதி ஜெயனந்தி திருச்செல்வம் பிரதம அதிதியாகவும்,  அஞ்சல் அத்தியட்சகர்களான எம். தம்பிஐயா, எஸ். ஜெகன் ஆகியோர் கௌரவ அதிதியாகவும் பிராந்திய நிருவாக உத்தியோகத்தர் சீ. அருள்செல்வம், அஞ்சல் பயிற்சி கல்லூரியின் பிரதம போதனாசிரியர் பி. நரேந்திரன் ஆகியோர் விசேட அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X