2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘மாவட்டத்தின் உண்மைத் தகவல்கள் வெளியாகும்’

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ், எம்.என்.எம்.அப்ராஸ், வி.சுகிர்தகுமார்

அம்பாறை மாவட்ட ஊடக அலுவலகம்,  மாவட்டத்தின் உண்மைத் தகவல்களை வெளியிடுமென, அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஊடக செயலமர்வும் மாவட்ட ஊடாகப்பிரிவு அலுவலகத் திறப்பு  விழாவும், அம்பாறை மாவட்டச் செயலகத்தில் இன்று (06)  நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் தனை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே, மாவட்டச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“அரசாங்கத்தின் கொள்கைகள், அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மாவட்டச் செயலகத்தின் கடமையும் பொறுப்புமாகும். இவை தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் இடமாக மாவட்ட செயலகத்தின் ஊடகப்பிரிவு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

“மாவட்டத்தின் உண்மைத் தன்மைகளை இந்த அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். எதிர்காலத்தில் மாவட்ட ஊடகப்பிரிவுக்காக தனியான அலுவலகம் ஒன்றை அமைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

“எமது மாவட்டம் பற்றி ஊடகங்களில் வெளிவரும்  செய்திகளை ஆவணப்படுத்தி, பிழைகளைத் திருத்திக்கொண்டு முன்னேறுவோம். இதற்கு ஊடகவியலாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .