2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வீடு தீக்கிரை; சடலம் மீட்பு?

Editorial   / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு, நடராஜன் ஹரன்

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில்-02, தம்பிமுத்து வீதியில் கட்டக் கொந்தராத்து மேற்கொண்டு வரும் நபருடைய பழைய வீடொன்றி தீக்கிரையாகியுள்ளது.

இதன்போது, எரிந்த இயந்திரமொன்றுக்கு அடியில் மனித உடலைப் போன்ற ஓர் உருவம் எரிந்து கிடப்பது தொடர்பான விசாரணைகளைத் தற்போது முன்னெடுத்து வருவதாக, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தை அறிந்து, திருக்கோவில் பொலிஸார், காஞ்சிரம்குடா இராணுவத்தினர், புலனாய்வு உத்தியோகத்தர்கள், அப்பகுதி கிராம உத்தியோகத்தர் என அனைவரும் சம்பவ இடத்துக்கு விரைந்திருந்தனர்.

மேற்படி வீடு, நேற்று (11) இரவு முற்றாக எரிந்துள்ள நிலையில், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நெல் அறுவடை இயந்திரமும் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த இயந்திரத்துக்குக் கீழ் அடையாளம் காண முடியாத நிலையில் ஒரு உருவம் எரிந்து கிடப்பதாகவும் இது மனிதனுடையதா?  என்ற சந்தேகம் எழுந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு, அம்பாறை தடயவியல் குற்றப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தி உள்ளதாகவும் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் வீட்டு உரிமையாளர், அவருடைய வேறு ஒரு வீட்டில் விசித்து வருவதுடன், இவ் வீடு, அவருடைய தொழில் ரீதியான உபகரணக் களஞ்சிய வீடாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதாக, வீட்டு உரிமையாளரின் மனைவி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X