2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெளியாருக்கு அறிவுறுத்தல்

Princiya Dixci   / 2021 மே 09 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலை மிக வேகமாக பரவிவருவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், வெளிமாவட்டங்களிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு வருபவர்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் இன்று (09) தெரிவித்தார்.

கடந்த 24 மணி கிழக்கு மாகாணத்தில் 77 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதோடு, இதில் அம்பாறை - தெஹியத்தகண்டி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 23 பேர் கூடுதலான தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,804 பேரும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,229 பேரும், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,520 பேரும், அம்பாறை சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 959 பேருமாக கிழக்கு மாகாணத்தில் 5,512 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தெஹியத்தக்கண்டி, திருகோணமலை, உப்புவெளி, மட்டக்களப்பு, உகன, களுவாங்சிக்குடிய, கிண்ணியா ஆகிய 07 வைத்தியதிகாரி பிரிவுகள் மிக அவதானத்திற்குரிய வலயங்களாக காணப்படுவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுள்ளார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 29,110 பேருக்கும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 10,775 பேருக்கும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 22,838 பேருக்கும், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 21,809 பேருமாக மொத்தம் 84 ஆயிரத்தி 532 பேருக்கு பீ.சீ.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனாத் தொற்றின் மூன்றாவது வது அலையில் திருகோணமலை மாவட்டத்தில் 940 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 248 பேரும், அம்பாறையில் 614 பேரும், கல்முனையில் 37 பேருமாக மொத்தம் 1,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

2வது கொரோனாத் தொற்று அலையில் 26 பேரும், 3வது கொரோனாத் தொற்று அலையில் 23 பேருமாக மொத்தம் இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 49 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் புதிதாக 1,500 படுக்கைகளைக் கொண்ட 04 சிகிச்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .