2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வெளிவாரிப் பட்டப்படிப்பு பரீட்சைகள் ஆரம்பம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள், தொழில்சார் கற்கைகள் நிலையத்தால் நடத்தப்படுகின்ற 3ஆம் வருட கலைமாணி, வியாபார நிர்வாகமாணி, வர்த்தகமாணி (பொது-வெளிவாரிப் பட்டப்படிப்பு - பழைய பாடத்திட்டம்) பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள், தொழில்சார் கற்கை நிலையத்தின் உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் தெரிவித்தார்.

கலைமாணி 3ஆம் வருடப் பரீட்சைகள், நாளை மறுதினமும் (06), வியாபார நிர்வாகமாணி, வர்த்தகமாணி 3ஆம் வருடப் பரீட்சைகள், ஏப்ரல் 20ஆம் திகதியும், பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இப்பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள், பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதும், அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள், 067-2052801 எனும் தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்புகொள்ளுமாறும், உதவிப் பதிவாளர் கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .