2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வேட்புமனு நிராகரிப்பு; வழக்குத்தாக்கலுக்குத் தயார்

வி.சுகிர்தகுமார்   / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சம்மாந்துறை, ஆலையடிவேம்பு ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

புதிய தேர்தல் முறைக்கமைய, சகல சட்டதிட்டங்களுகும் உட்பட்ட வகையிலேயே, தமது வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் கையளிக்கும் போது ஏற்பட்ட சில குறைபாட்டின் காரணமாகவே, தமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த விடயம் தொடர்பாக தமிழ்தேசியகூட்டமைப்பின் உயர்பீடத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன். வேட்புமனு நிராகரிக்கப்பட்டமையை, விரைவில் நாம் நீதி கோரி வழக்குத்தாக்கல் செய்யவுள்ளோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X