2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வைத்திய முகாம்...

Editorial   / 2018 மே 08 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம், கல்முனை, மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையில், டொக்டர் நுவான் குமார தலைமையில் கடந்த 4ஆம், 5ஆம், 6ஆம் திகதிகளில், ​வைத்திய முகாம் நடைபெற்றது.
லயன்ஸ் கழகம், கல்லோயாக் கிளையின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த வைத்திய முகாமில் பிரதம அதிதிகளாக, கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எ.எல்.அலாவுடீன், டொக்டர் இஸ்ஸடீன், டொக்டர் மர்சூக் கலந்துகொண்டனர் என்பதுடன், தலைமை மேற்பார்வை தாதிய உத்தியோகத்தர் யு.எம்.எ. ஜின்னா மேற்கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் 40 செயற்கைக் கால்கள், 100 மூக்குக் கண்ணாடிகள் ஆகியன வழங்கப்பட்டதுடன், 700க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு, இலவச சீனிப் பரிசோதனை, குருதி அமுக்கம், உடல்நிறைச் சுட்டி போன்றன பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .