2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு 41 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு

வி.சுகிர்தகுமார்   / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் உள்ளக வீதி அபிவிருத்திக்காக அமைச்சர் மனோகணேசனால் 41 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழி அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் தா.ஜெயாகரின் முயற்சியின் பயனாகவே இந்நிதி பாடசாலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை நிர்வாகமும் பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் இணைந்து அமைச்சின் இணைப்பாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இத்திட்டத்திற்கான நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்மூலம், மழைக் காலங்களில் மாணவர்கள் எதிர்கொண்டுவந்த உள்ளக சீரற்ற பாதைப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மழை, வெள்ள அபாய காலங்களில் மாணவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைக்கான தீர்வுக்காணும் விடயம் தொடர்பில், பாடசாலை நிர்வாகமும் பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் தற்போதே இதற்கான உரிய தீர்வு வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .