2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

17 அடி உயரம் கொண்ட ஐய்யனார் சிலை!

Editorial   / 2020 ஜனவரி 26 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி,

  71வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை 

ஏற்றினார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், டெல்லி ராஜபாதையில் குடியரசு தின விழாவில் பல்வேறு

மாநிலங்கள் சார்பில் 16 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. அதில் தமிழகத்தின் சார்பில் ஐய்யனார் கோவில் திருவிழாவை விளக்கும் வகையில்

அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. தமிழர்களின் காவல் தெய்வமாக கருதப்படும் ஐய்யனார் சிலை காட்சிப்படுத்தப்பட்டது.

17 அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிலை, அவருக்கு முன்னால் குதிரையும், காவலா ளிகளும் இருப்பது போல் ஐய்யனார் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின்

பாரம் பரிய இசை, நடனம் என வண்ணமயமாக வந்த தமிழகத்தின் அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .