2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘2021ஆம் ஆண்டில் அதிசயம் அற்புதம்’

Editorial   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்தாண்டு நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக இன்று தெரிவித்த அவரின் சகோதரர் சத்தியநாராயண ராவ், 2021ஆம் ஆண்டு ரஜினிகாந்த் கூறிய அதிசயம் அற்புதம் நிகழும் எனக் கூறியுள்ளார்.

இந்தியாவின் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தென்பெண்ணை ஆற்றின் சாக்கடை கால்வாயைப் பொதுமக்கள் கடந்து செல்லும் வகையில் மூன்று இடங்களில் மூன்று இலட்சம் இந்திய ரூபாய்கள் மதிப்பில் சிறு பாலங்கள் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில், ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி பாலங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சத்தியநாராயண ராவ் பங்கேற்று பாலங்களை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோதே மேற்படி கருத்தை வெளிப்படுத்தியிருந்ததுடன், அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் முன்னோடியாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்குச் செய்துள்ளனர். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி சாக்கடை கால்வாய் வழியாகச் சென்று கொண்டிருந்த மக்களுக்குப் பாலம் அமைத்துக் கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை மக்கள் மன்றத்தினர் செய்ய வேண்டும். 2020ஆம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார். சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திப்பார். 2021ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் கூறிய அதிசயம் அற்புதம் நிகழும். 2021ஆம் ஆண்டு தேர்தலில் ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிடுவார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவிப்பார்" எனக் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X