2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் அதிர்ச்சி

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சென்னை:

சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி அருகிலுள்ள ஐந்து மாடிக் கட்டடம் இருந்தது.இதன்போது கட்டடத்தில் ஒருவர் மட்டுமே தங்கியுள்ளார்.

நேற்றிரவு 8.30 மணியளவில் அந்த 5 மாடிக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதைத் தொடர்ந்து தீயணைப்புப் படையி னருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி உட்பட பல்வேறு பகுதிகளி லிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில்

ஈடுபட்டனர். கட்டடம் இடிந்து விழுந்தபோது அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் எந்த இழப்பும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .