2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

குஜராத் ஓ.என்.ஜி.சி. தொழிற்சாலையில் தீ விபத்து

A.K.M. Ramzy   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

குஜராத் ; குஜராத் ஓ.என்.ஜி.சி. எரிவாயு பதப்படுத்தும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட தால் பரபரப்பு நிலவியது. 

தீ மளமளவெனப் பரவியதில் அடுத்தடுத்து மூன்று குழாய்கள் வெடித்து சிதறின.

குஜராத் மாநிலத்தில் சூரத் பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி. எரிவாயு பதப்படுத்தும் தொழிற் சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தொழிற்சாலை நுழைவு வாயில் முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்து மளமளவென பரவியதில் அடுத்தடுத்து மூன்று குழாய்கள் வெடித்துச் சிதறின.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத் தீயணைப்பு வாகனத்துடன் உடனடியாகத் தகவலறிந்து விரைந்த மாநகராட்சி தீயணைப்புத்துறையினரும், அருகாமை தொழிற்சாலை தீயணைப்புத்துறையினரும் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதில், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்து முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படு முந்தைய நிலை திரும்பிய பிறகு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தால் உயிர்சேதங்கள் ஏதும் ஏற்பட வில்லை என்றும், தொழிற்சாலை சீரமைக்கப்பட்டு விரைவில் இயல்பு நிலை கொண்டு வரப்படும் என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .