2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’எனக்கு எந்த அறிகுறியுமில்லை’

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையாள நடிகர் பிருத்விராஜுக்கு (38) கொரோனா தொற்று   உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனியின் "ஜன கண மன' திரைப்பட படப்பிடிப்பில்பங்கேற்ற நிலையில் பிருத்விராஜுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து  அவர் தெரிவிப்பதாவது:

படப்படிப்பில் கொரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடுமை யாகப் பின்பற்றினோம்.

படப்பிடிப்பு தொடங்கும் முன்பு அனைவருக்கும் சோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே பணிபுரிய அனுமதிக்கப் பட்டனர்.

கடைசி நாள் படப்பிடிப்பின்போது மீண்டும் கொரோனா  பரிசோதனை மேற்கொண்டபோது எனக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

எந்த அறிகுறியும் எனக்கு இல்லை, நலமாக இருக்கிறேன்.

என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .