2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா’

Editorial   / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோதே மேற்படி கருத்தை வெளிப்படுத்தியிருந்த அசோக் கெலாட், மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள், தாங்கள் ஜனநாயகத்தை நம்பாத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்பதை உணரவேண்டும். 

இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டை அவர்கள் வழிநடத்தி வருகின்றனர். சீனாவைப்போல ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா வேகமாக சென்று கொண்டிருக்கிறது” என்று கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .