2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் திஷா ரவிக்கு தொடர்பு;பிணை ஒத்திவைப்பு

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் இணைந்து டூல்கிட் தயாரிப்பு பணியில் திஷா ரவி ஈடுபட்டு இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உலகளாவிய சதிக்கும், விவசாயிகள் போராட்டத்தில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்தவும் முயன்றுள்ளார். ஆதலால், திஷா ரவிக்கு பிணை வழங்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் டெல்லி பொலிஸார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, திஷா ரவியின் பிணை மீதான தீர்ப்பை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு நீதிபதி ஒத்தி வைத் தார்.டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஸ்வீடனை சேர்ந்த பருவநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க் டூல்கிட் லிங்க் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.

இந்த டூல்கிட்டை பெங்களூருவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி, மும்பையை சேர்ந்தநிகிகா ஜேக்கப், அவரது கூட்டாளி ஷாந்தனு ஆகியோர் உருவாக்கியதாக டெல்லி சைபர் கிரைம் பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக திஷா ரவியை கடந்த 14ஆம் திகதி  பெங்களூருவில் வைத்து டெல்லி சைபர் கிரைம் பொலிஸார் கைது செய்து டெல்லி கொண்டு சென்றனர். அதன்பின் 5 நாட்கள் பொலிஸ் காவலில் திஷா ரவி அனுப்பி வைக்கப்பட்டார். அந்த காலக்கெடு முடிந்த நிலையில், தற்போது நீதிமன்றக் காவலில் திஷா ரவி இருந்து வருகிறார்.

இந்நிலையில் திஷா ரவி பிணை கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கூடுதல் செசன்ஸ் நீதிபதி தர்மேந்திர ராணா முன்னிலையில்   விசாரணைக்கு வந்தது. அப்போது திஷா ரவிக்கு பிணை வழங்க பொலிஸார் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X