2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மஹால் திறக்கப்படாது

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா சின்னமான தாஜ்மஹால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திறக்கப்படாதென அறிவிக்கப்பட்டு உள்ளது.

நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப் பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக் கப்பட்டதில், இன்று முதல் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்களையும் திறக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், ஆக்ராவில் நோய்த்தொற்று காரணமாக 71 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப் பட்டு உள்ளன.

இதனால், தாஜ்மஹால், பதேபூர் சிக்ரி, ஆக்ரா கோட்டை உள்ளிட்ட நினைவுச்சின்னங்கள் இப்போது திறக்கப்படாது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X