2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘சசிகலா, தினகரனுக்கு இடம் கிடையாது’

Administrator   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அ.இ.அ.தி.மு.க) சசிகலா, தினகரனுக்கு இடம் கிடையாது என இந்தியாவின் தமிழ்நாட்டின் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.கவின் 48ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் முன்னாள் தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினர். இதனையடுத்து தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்படி கருத்தை ஜெயக்குமார் வெளிப்படுத்தினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “ஜெயலலிதா கூறியபடி உலகம் உள்ளவரை அ.இ.அ.தி.மு.க நிலைத்து நிற்கும். தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.கவை விட பெரிய இயக்கம் எதுவும் இல்லை. ஒவ்வொரு சோதனையின்போதும் அ.இ.அ.தி.மு.க வீறு கொண்டு எழும். உள்ளாட்சி தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிக்கும். அ.இ.அ.தி.மு.கவில் சசிகலா, தினகரனுக்கு இடம் கிடையாது” என்று கூறினார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .