2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சசிகலா பிணையில் விடுதலையாக வில்லை

Editorial   / 2020 மார்ச் 27 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரு, 

கொவிட்-19  வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா உட்பட கர்நாடகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளை சந்திக்க அனுமதி கிடையாது என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலா பிணையில் வெளியே வர இருப்பதாக தகவல் வெளியானது.

இதனை பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறைத்துறை அதிகாரி மறுத்துள்ளார். 

கொவிட்-19  வைரஸ் பீதியால் சசிகலா உட்பட எந்த ஒரு தண்டனை கைதியையும் ஜாமீனில் விடுவிக்க முடிவு எடுக்கவில்லை,

அது தொடர்பாக வரும் தகவல்கள் உண்மை அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X