2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

சட்டசபையிலிருந்து இன்றும் திமுக வெளிநடப்பு

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

தமிழக சட்டசபை இந்த ஆண்டின் முதல் கூட்டம் நேற்று   ஆரம்பமானது. இதில் கவர்னர் பன்வாரி லால் புரோஹித் உரையாற்றினார். 

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நேற்று திமுக எம் எல் ஏக்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையின் இரண்டாவது  நாள் கூட்டம் இன்றும் தொடங்கியது. சட்டபையில் மு.க.ஸ்டாலின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளேன் என கூறினார்.

அதற்கு  சபாநாயகர் நீங்கள் கொடுத்த மனு ஆய்வில் உள்ளது என கூறினார். பாஜக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் ஒருமைப்பாட்டிற்கு உகந்தது அல்ல என மு.கஸ்டாலின் கூறினார்.

துரைமுருகன் கூறும்போது, ஆய்வு செய்து தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என்ற பொன்னான வார்த்தையை சொல்லிவிட்டால் நாங்கள் திருப்தியடைவோம் என கூறினார்.

தொடர்ந்து குடியுரிமை சட்டதிருத்த  விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேர வையில் இருந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் நேற்றும் இரண்டாவது நாளாக  வெளிநடப்பு செய்தனர்.

திமுகவுடன் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும்  தமிமுன் அன்சாரி, அபூபக்கர் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்புக்கு பின் சட்டசபை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

குடியுரிமை சட்டதிருத்த விவகாரத்தில் நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

ஆங்காங்கே கலவரம், துப்பாக்கிச்சூடு என இடம்பெறும்போது இதனை பேரவையில் விவாதிக்க வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத் தினேன்.

எனது கோரிக்கையை ஏற்க மறுத்ததால் வெளிநடப்பு செய்தோம். ஜனவரி 2ஆம் திகதி மனு அளித்தோம். இதுவரை மனுவை எடுக்கவில்லை.

சட்டசபை இன்னும் 2 நாள்களே நடக்க இருப்பதால் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .