2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 16ஆயிரத்தைத் தாண்டியது

A.K.M. Ramzy   / 2020 மே 25 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

 

தமிழகத்தில் புதிதாக 765 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளதால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் எட்டு நபர்கள் இறந்துள்ளனர் என்பதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 நேற்று இறந்தவர்களில் ஐந்து நபர்கள் சென்னையில் சிகிச்சை எடுத்துவந்தவர்கள், மற்ற இரண்டு நபர்களும் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதிக்கப்

பட்டவர்கள். இவர்கள் அனைவருக்கும் நாள்பட்ட வியாதிகளான உயர் இரத்தஅழுத்தம், உடல்பருமன், மூச்சு திணறல் மற்றும் சர்க்கரை நோய் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களை விட ஆண்களே அதிகம் இறப்புகளுக்கு ஆளாகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

  இறந்த எட்டு நபர்களில் ஒருவர் மட்டுமே பெண் மற்ற ஏழு நபர்களும் ஆண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இவர்கள் அனைவரும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X