Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Editorial / 2020 ஜூலை 06 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை சித்தரவதை செய்து கொன்ற வழக்கில் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 5 பேரை சிபிசிஐடி பொலிஸார் கைது செய்தனர்.
பேரூரணி சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிக்கி உதவி ஆய்வாளர் ரகு கணேஷிடம் அடி வாங்கிய கைதிகள் பலர் அங்கு உள்ளனர்.
அவர்கள் ஒன்று சேர்ந்து ரகு கணேஷ் மீது தாக்குதல் நடத்தலாம் என் பதால், பாதுகாப்புக் காரணங்களைக் கூறி 5 பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
கைதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படுவதால் யாரும் நெருங்க முடியாத வகையில் 5 பேரையும் தனிமைப்படுத்தியுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் கைதான காவல்துறையினர் ஐந்துபேரை விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக சிபிசிஐடி இன்று முக்கிய முடிவெடுக்க உள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது.
சிபிசிஐடி பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கையாக் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் கொரோனா பணிக்கு தன்னார்வலர்களாக பணியாற்றிய 7 பேரிடம் விசாரண நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago
23 Apr 2024