2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம்

A.K.M. Ramzy   / 2020 ஜூலை 01 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை,

சாத்தான்குளம் சம்பவத்துக்குக் கடும் கண்டனத்தை  தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் பதிவு செய்துள்ளார்.

அங்கு தொடர்ந்து ரஜினிகாந்த் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தந்தையும் மகனையும் சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித

இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து

அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. சத்தியமா விடக்கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .