Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 06 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது.
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக சென்னையில் கொரோனா தொற்று 2 ஆயிரத்தைத் தாண்டி இருந்த நிலையில், நேற்று 1,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 68,254 ஆக உள்ளது. 1,053 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேர், ஓமந்தூரார் அரசு
மருத்துவமனையில் ஆயுதப்படை காவலர் உள்பட 6 பேர் மற்றும் ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago