2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜெயின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க கோரும் வழக்கு தள்ளுபடி

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த மணிமாறன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,

 " நான் அதிமுக கட்சியின் சிவகங்கை மாவட்ட மாணவரணி பொருளாளராக

உள்ளேன்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 11 ஆண்டுகளாக தமிழக முதல்வராக இருந்து ள்ளார். 1984 முதல் 1989 வரை ராஜ்யசபா உறுப்பினரா கவும் இருந்துள்ளார்.

தனது தனித்துவமான குணங்களால் உலகின் மிகச்சிறந்த தலைவராக இருந்துள்ளார். தமிழகத்துக்குப் பல்வேறு சிறப்புத் திட்டங்களைக் குறிப்பாக,

மழைநீர் சேகரிப்புத் திட்டம்; தொட்டில் குழந்தைகள் திட்டம் உட்பட பல அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் கொண்டு வந்துள்ளார்.

அரசியலில் முழு ஈடுபாடுடன் பயணித்த செல்வி ஜெயலலிதா உள்ளாட்சித்

தேர்தல்களில் பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டையும் கொண்டு வந்தார்.

  அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கக்கோரி மனு அளித்தும்

நடவடிக்கை இல்லை.

ஆகவே, தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன், "மனுதாரர்

செல்வி.ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று என்பதைத் தவிர வேறு பொருத்தமான காரணங்கள் இன்றி வழக்கை தொடர்ந்துள்ளார்.

ஆகையால், மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க இயலாது" எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X