Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் கோவை, நாகூர் உள்ளிட்ட 6 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (31) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனா்.
தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து அண்மையில் தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் கோவையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனா். இந்த சோதனையின் போது சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், கோவையில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனா். லாரிபேட்டை மற்றும் ஜிஎம் நகரில் உள்ள இரண்டு பேரின் வீடுகளில் இந்த சோதனை நடைபெறுகிறது.
இதேபோல் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே மியான்தெருவில் முகமது அஜ்மல் என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அஜ்மல் என்பவரை கைது செய்து விசாரணைக்காக என்.ஐ.ஏ அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். மேலும், இளையான்குடி, திருச்சி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் ஆகிய இடங்களிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
5 hours ago