2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தமிழில் உறுதிமொழி எடுப்பது என் கனவு

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுச்சேரி:

புதுச்சேரி துணைநிலை ஆளுனராக பொறுப்பேற்ற தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

 துணைநிலை ஆளுனராக இல்லாமல் மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக இருப்பேன்.தெலுங்கானா, புதுச்சேரி என இரட்டைக் குழந்தைகளை கையாளும் திறன் மருத்துவரான எனக்கு உள்ளது.

பதவிப் பிரமாணத்தின் போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் குறைவாக இருப்பது வேதனையளிக்கிறது.

  நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் அளித்த புகார் குறித்து ஆலோசித்து சட்டப்படி முடிவெடுப்பேன் என்று கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .